வன்னி மற்றும் முகமாலை களமுனைகளில் கடந்த மூன்று நாட்கள் இடம்பெற்ற மோதல்களில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த 200 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 300-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் நேற்று புதன்கிழமை காலை சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 8 மணித்தியாலங்கள் விசாரிக்கப்பட்டார்.
இலங்கையில் போர் நிறுத்தம் கோரி நவம்பர் 25ம் திகதி நடத்தப்பட இருந்த முழு அடைப்புப் போராட்டம், மறியல் போராட்டமாக மாற்றப்படுவதாக இந்திய கொம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் அறிவித்துள்ளார்.
யேர்மனியில் தாயகமக்களின் அவலங்களை யேர்மனிய அரசிற்கும் யேர்மனிய மக்களுக்கும் எடுத்துரைக்கும் கவனயீர்ப்பு போராட்டங்கள் யேர்மனிய நகரங்கள் தோறும் யேர்மன்வாழ் தமிழீழ மக்களால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
வவுனியா புளியங்குளம் பகுதியில் சிறிலங்கா படையின் ஆழ ஊடுருவும் அணி நடத்திய கிளைமோர் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன் இருவர் உட்பட மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் போர்நிறுத்தம் செய்யக்கோரி தமிழகம் முழுவதும் எதிர்வரும் 25ஆம் திகதி முழு அடைப்புப் போராட்டம் ஒன்றை நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சென்னையில் திங்கட்கிழமை கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இலங்கையில் இடம்பெறும் திட்டமிட்ட தமிழினப் படுகொலையைக் கண்டித்தும், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும், தமிழ்நாடு மக்களிற்கு நன்றி தெரிவித்தும் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பூநகரிப் பகுதியில் நடைபெற்ற மோதல்களில் சிறிலங்கா படையின் எட்டு அதிகாரிகள் உட்பட 54 போ் கொல்லப்பட்டுள்ளனர். 350 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்பு அரசினர் மருத்துவமனையில் விசர்நாய்க்கடிக்கான ஏ.ஆர்..வி தடுப்பூசி மருந்து முற்றாக முடிவடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஈழத்தில் அப்
பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதனைக் கண்டித்து மலேசியாவில் உள்ள சிறிலங்கா தூதரகம் முன்பாக 2 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் ஒன்றுதிரண்டு கண்டனப் பேரணி நடத்தியுள்ளனர்.
வன்னி மக்களிற்கு உதவுவதற்காக வட நெதர்லாந்திலுள்ள ஒரு நிறுவனத்தில் வேலைசெய்யும் அனைத்து தமிழ்த் தொழிலாளர்களும் ஒன்றிணைந்து கடந்த திங்களன்று துயர் துடைக்கும் கவனயீர்ப்பு நாளாக அறிவித்து தங்களின் ஒருநாள் சம்பளத்தை வன்னி மக்களிற்கு வழங்கியுள்ளார்கள்.
விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவை தழுவிக் கொண்ட மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு தருமபுரத்தில் இடம்பெற்ற கண்டாவளைக் கோட்டத்திற்கான மதிப்பளிப்பு நிகழ்வானது தர்மபுரம் வட்டப்பொறுப்பாளர் சரவணன் தலைமையில் இடம்பெற்றது.




காங்கோ ஜனநாயகக் குடியரசில் இருக்கும் லாரண்ட் என்குண்டா அவர்கள் தலைமையிலான கிளர்ச்சிக்குழு, கிவு பிராந்தியத்தின் கிழக்குப்பகுதியில் தமது தற்போதைய நிலைகளில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்துக்கு பின்வாங்கிச் செல்லப்போவதாக அறிவித்துள்ளது.
வெற்றிலைக்கேணிக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படைக்கும் - கடற்புலி களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலானது அண்மையில் வடக்கு கடற்பரப்பில் நிகழ்ந்த மோதல்களில் குறிப்பிடத்தக்கதும் சில விசேடித்த முக்கியத்துவம் கொண்டதுமாகும்.
சிறிலங்காப் படைநடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்து பல்வேறு மனப்பாதிப்புக்குள்ளாகியிருக்கும் சிறுவர்களை மனம் மகிழ்விக்கும் செயற்பாடு ஒன்று கடந்த வாரம் இராமநாதபுரம் கருவேந்தன் குடியிருப்பில் இடம்பெற்றது.





