கனேடிய ஊடகத்தில் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்த சிறிலங்காவின் போர் குற்ற ஆதாரங்கள் !

logo_nationalpost

கனடாவின் nationalpost ஊடகம் தமிழர்களுக்கு எதிரான சிறிலங்காவின் போர்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பிலான ஆதாரப்பதிவுகள் மீண்டும்வெளிச்சம் போட்டுக் காண்பித்துள்ளது.

சிறிலங்கா ஆக்கிரமிப்பு படைகளினால் வல்வளைப்புச் செய்யப்பட்ட போராளிகள் தொடர்பிலான ஒளிப்படங்கள் மற்றும் காணொளிப் பதிவுகளை nationalpost ஊடகம் வெளியிட்டு வைத்துள்ளது.

http://news.nationalpost.com/2012/06/16/leaked-photos-reveal-fate-of-tamil-prisoners/
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவற்றுறை அமைச்சகத்திடம்,  கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில், கனேடிய ஊடகத்தில்  அம்பலமாகியுள்ளன.

தமிழ் ஊடகப்பரப்பில் குறித்த ஆதாரங்கள் ஏலவே வெளிவந்திருந்தாலும், இவ்வாறு வெளிநாட்டு ஊடகளில் வெளிவருவதன் ஊடாகவே, சிறிலங்காவின் தமிழின அழிப்பினை, சர்வதேசத்திற்கு வெளிச்சம் போட்டுக் காண்பிக்க முடியுமென என நா.த.அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சக செய்திக்குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிடைக்கப்பெறும் ஆதாரங்களை, சர்வதேச ஊடகப்பரப்பிற்கு கொண்டு செல்ல வேண்டிய பணியினை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்சியாக மேற்கொண்டுவருவதாகவும் அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Both comments and pings are currently closed.

Comments are closed.

Powered by WordPress