தமிழினம் தலைநிமிருமா? தாழ்ந்து போகுமா?-ஈஸ்வரன்-
2009 மே 19
வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்து விடுதலையை நோக்கி வேகமாக முன் சென்ற விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்கால் மண்ணில் வங்காள விரிகுடாவிற்கும் நந்திக் கடலுக்கும் மத்தியில் தோற்கடிக்கப்பட்டு சிதைக்கப்பட்ட நாள் அது. இலட்சத்திற்கு மேற்பட்ட மனித உயிர்களின் பலியில், பல ஆயிரம் போராளிகளின் உயிர்க்கொடையில், கோடானகோடி பெறுமதியான சொத்துக்களின் இழப்பில,; கணவனை இழந்த விதவைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர் ஆகியோரின் கண்ணீரில,; ஏராளமானோரின் உடலுறுப்புகளின் இழப்பில் பச, தாகம், தூக்கமின்மை போன்ற ஒவ்வாமைகளுக்கு முகம் கொடுக்கும் மன உறுதியுடன் சிறுகச் சிறுகக் கட்டி வளர்க்கப்பட்டு வளர்ந்து கொழுந்து விட்டு எரிந்த விடுதலைப் போர் அன்று சர்வதேசச் சதிக்குள் சிக்கி நிர்மூலமானது. ஏறக்குறைய 4 இலட்சம் மக்களை ஏதிலிகளாக்கி அகதி முகாம்களுக்குள் குவித்தது. அது திறந்த வெளி முட்கம்பிச் சிறைக்குள் முடக்கியது.


Posted in